மலையகத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான திரு பிலிப் இராமையா அவர்களின் 90 வது  பிறந்த தின விழாவும் மலர் வெளியீடும் மார்ச் சனிக்கிழமை 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு இராகலை உயர்பாடசாலையில் இடம் பெறவிருக்கின்றது. இச்சந்தர்பத்தில் இவருக்காக வெளிவருகின்ற மலர் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும்.

இந்த ஆண்டு மலையகம் 200 என்ற மையப்பொருளில் மலையக பிரதேசங்கள் பலவற்றிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன பல இடம்பெறதிட்டமிடப்பட்டுள்ளன. அந்தவகையில் தொண்ணூரை தொடுகின்ற ஆசிரியர் பிலிப் இராமையா பற்றிய மலர்வெளியீடும் ஒன்றாக கருதலாம்.

இவரது வாழ்வு இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான 75 ஆண்டு கால பகுதியை உள்ளடக்கியதாகும். இக்கால கட்ட சமூக அரசியல் சூழ்நிலைகளை தரிசிக்கின்ற வாய்ப்பை இவரது மாணவர்கள் ஒன்பது பேரும் இவரது நெருங்கிய நண்பர்கள் பதினோரு பேரும் எழுதியுள்ள அனுபவப் பகிர்வுகள் வழங்கியுள்ளது. இதற்கு மேலாக் இவர் தந்துள்ள நீண்ட நேர்காணல் இவரூடாக 75 ஆண்டு கால மலையக சமூகத்தின் பல்வேறு அம்சங்களை எடுத்து காட்டுவதாக உள்ளது.

முன்னூற்று முப்பது பக்கங்களை கொண்ட கனதியான இந்த மலர் இருபத்தைந்து கட்டுரைகளை உள்ளடக்கியதாய் காத்திரமான ஒன்றாக திகழ்கிறது. இவற்றுள்பெரும்பாலனவை மலையகம்சார்ந்தவை. கல்வி குறித்த மூன்றும் இலக்கியம் சார்ந்த எட்டும் சமூகம் சார்ந்த ஐந்தும் அரசியல் சார்ந்த ஒன்பதுமாக பலதுறைகளை 225 பக்கங்களில் உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரைகளை பல்கலைகழக மற்றும் கல்லூரி ஆசிரியரகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள.

அரச ஊழியர்கள் என் பல திறத்தவர்களும் படைத்துள்ளனர். அந்த வகையில் இந்த மலர் பல்வேறுபட்ட அம்சங்களை சுமந்து வந்துள்ளது. புலமை சார்ந்தவர்களுக்கு மாத்திரமின்றி சாதாரண பொது வாசகர்களுக்கும் இம்மலர் வாசிக்க கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை. மலையகம் 200 என்ற தொனிப்பொருளுக்கு இந்த மலர் ஒருவகையில் வலு சேர்க்கிறது எனலாம்.