ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.
15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.