மலையக மக்களின் ‘வலியும் வாழ்வும்’- ஓவியக்கண்காட்சி மலையகம் 200ஐ முன்னியட்டு மலையக மக்களின் ‘வலியும் வாழ்வும்’ எனும் கருப்பொருளிலான ஓவியக்கண்காட்சி இலங்கையின் ஐந்து பிரதான நகரங்களில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை இம்மாதம் 20,21ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியிலும் 22, 23 ஆம் திகதிகளில் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியிலும், 27, 28ஆம் திகதிகளில் கிளிநொச்சி விவேகானநட்தா வித்தியாலயத்திலும், நவம்பர் மாதம் 18, 19ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்திலும், நவம்பர் 24, 25ஆம திகதிகளில் அட்டன் நகரசபை மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.