யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்ற சபையிலிருந்து வெளியியேற்றப்பட்டார்.
சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக்கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை சபையியிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபை அமர்வுகளை குழப்பும் வகையில் ஒழுங்குப் பிரச்சினை என்று கோரி அவர் குழப்பம் விளைவிப்பதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.