வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர்கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வட மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சை யுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரணதர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம் என்றார்.