அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ரிஸ்லி முஸ்தபா

0
82

கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

ரிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சில் இணைந்து கொள்ளும் நிகழ்வு மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எல்.எம்.ஐயூப்கான் தலைமையில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான கே.எம்.ஏ.
றசாக்(ஜவாத்), ஐ.எல்.எம்.மாஹிர்,எம்.எஸ்.சுபைர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில்,மற்றும் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வின் அங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் காரியாலயம் கல்முனையில் உள்ள றிஸ்லி
முஸ்தபாவின் அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

ரிஸ்லி முஸ்தபா அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வகையான சமூக நல உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஷ்ரப்கான், ஏ.எல்.எம்.சினாஸ் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here