அக்கரபத்தனையில் ஆட்டோ ஒன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

0
177

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹென்போல்ட் தோட்ட பிரிவான
சென்ட்ரெகுலாஸ் தோட்டத்தில் பெண் சிசு சடலம் ஒன்றை அக்கரபத்தனை பொலிசார் மீட்டுள்ளனர்.

வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து இந்த சடலம் திங்கட்கிழமை (09) இரவு (10) மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.

ஹென்போல்ட் தோட்ட பிரிவான
சென்ட்ரெகுலாஸ் தோட்டத்தில் வீடு ஒன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து (09) இரவு துர்நாற்றம் வீசியுள்ளது.

இந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்ட அவ் வீட்டின் பெண் ஒருவர் வண்டியில் இருந்து பொதி ஒன்றை வெளியில் இறக்கி சோதனையிட்டுள்ளார்.

இதன்போது   துணியால் சுத்தப்பட்டவாறு  இருந்த பொதியில்  சிசு ஒன்றின் சடலத்தினை அவ் வீட்டு பெண் கண்டுள்ளார்.

பின் தான் பயந்து கூச்சலிட்ட பின் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தவர்கள் சம்பவம் தொடர்பில் உடனடியாக அக்கரப்பத்தனை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் சுசுவின் சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்துள்ளனர்.

இந்த நிலையில் (28) வயதான நபர் ஒருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக தெரிவித்த பொலிசார் சம்பவ இடத்திற்கு நீதிவான் வருகை தந்து விசாரணை செய்த பின் சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here