அக்கரபத்தனை நகர உணவகங்களில் பரிசோதனை

0
236

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மெராயா, மன்றாசி, பசுமலை போன்ற நகரங்களில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் ராமன் கோபால்  தலைமையில் பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் ஊடாக  உணவு பாதுகாப்பு, மற்றும் நகரங்களின் சுற்றாடல் பாதுகாப்பு, நகர கடைகள் சுகாதாரம் சம்பந்தமாக பரிசோதனை  செய்யப்பட்டது.

அந்தவகையில் அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு வெதுப்பக உணவுகள் சுகாதார முறைப்படியும் , முறையாக கிடைக்கும் வகையில் இதன்போது வெதுப்பகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் மெராயா, மன்றாசி,பசுமலை போன்ற நகரங்களில் சுகாதார அதிகாரிகள் குழுவோடு இணைந்து பிரதேச சபை தலைவர் ராமன் கோபால், சபை செயலாளர் மற்றும் சுகாதார பிரிவு உத்தியோகஸ்தர். தனுஷன் ஆகியோரும் நகரில் பொது இடங்களின் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு நன்மை பயிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. 

அத்துடன் அக்கரப்பத்தனை பிரதேசத்திற்குறிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வரும் பணிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சபை தலைவர் இராமன் கோபால் தெரிவித்தார்.

ஆர்.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here