அக்டோபர் மாதத்தில் மாத்திரம் சுமார் 28 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

0
143

அக்டோபர் மாதத்தில் மொத்தமாக 28,473 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக வெளியேறியுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அவர்களில் 11,399 பேர் தொழில்பயிற்சி பெறாத தொழிலாளர்கள் மற்றும் 7,887 பேர் தொழில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்.

6,165 பேர் வீட்டு வேலை செய்பவர்களாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப் பகுதியில் 251,151 நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here