அட்டன் – நோர்ட்டன், ஒஸ்போன் வீதியில் பயணிளுக்கான நிழற்குடை

0
352

நோட்டன் அட்டன் பிரதான வீதியின் ஒஸ்போன் பிரதேச பயணிகளின் நலன் கருதி புதிய பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டு இன்று பயணிகள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

அட்டன் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபையின் நிதியொதீக்கீட்டில் இந்த நவீன பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டது.

சம்பிரதாய பூர்வமாக பயணிகள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் ராம், லெதண்டி கிராம உத்தியோகஸ்தர் சண்முகராஜா , லெதண்டி பிரஜா பொலிஸ் குழு தலைவர் அணில் பிரசன்ன, கிளவட்டன் த.வி அதிபர் ரவிச்சந்திரன், ஒஸ்போன் தோட்ட உதவி முகாமையாளர், வெளிக்கள உத்தியோகஸ்தர் , இளைஞர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி திறப்பு விழா நிகழ்வினை பங்களா டிவிசன் இளைஞர்கள், ஏற்பாடு செய்திருந்தனர்.

நோட்டன் – அட்டன் பிரதான வீதியின் வனராஜா பகுதியிலும் இதே போன்ற புதிய நவீன வடிவமைப்பிலான பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டு அன்மையில் பயணிகள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here