அனுர குமாரவின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள நவீன சிசிடிவி கமராக்கள்

0
35
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிடிவி கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (12) காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே வேளை என்றும் இல்லாதவாறு கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here