‘அமரர் இர.சிவலிங்கம்’ – 23ஆவது நினைவுப்பேருரை நிகழ்வு

0
249

அமரர். இர. சிவலிங்கம் – 23 ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரையும் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அட்டன் ஹைலனடஸ் கல்லூரி மண்டபத்தில்  ஆரம்பமானது. 

அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறும்  இந்நிகழ்வு, மங்கல விளக்கேற்றல் – மலரஞ்சலியுடன் ஆரம்பமானது. 

ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரியின் அதிபர் இரா.ஸ்ரீதரின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு தலைவர் எம்.வாமதேவன் தலைமையுரையை நிகழ்த்த, கலாநிதி எஸ்.கருணாகரன் பேருரையாளரை அறிமுகஞ் செய்து வைத்தார். 

கொழும்பு பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ராஜதுரை (ஆங்கில மொழித்துறை) , ‘மலையக சமூக மேம்பாட்டில் ஆங்கிலமொழி மற்றும் மூன்றாம் நிலை கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில்  நினைவுப்பேருரை நிகழ்த்துவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here