இலஞ்சம் பெறும் போது கைதான அமைச்சரொருவரின் செயலாளர்

0
202

இராஜாங்க அமைச்சர் வியாழேந்தி ரனின் செயலாளர் ஒருவர் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் போது இலஞ்ச மோசடி திணைக்கள அதிகாரிகளால் இன்று மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலனறுவை பிரதேச வர்த்தகர் ஒருவரிடமிருந்து வெவ குளத்தில் இருந்து மணல் அகழும் முயற்சிக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு இந்த இலட்சம் பணம்
பெற முயற்சிப்பதாக உரிய நபர்
இலஞ்ச ஊழல் திணைக்களத்தில்
செய்த முறைப்பாட்டை அடுத்து இவர்
பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது
அதிகாரிகளால் கையும் மெய்யுமாக
கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கரடியனாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் இலஞ்சம் பணத்தை பெற முயற்சித்த
போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மோசடி திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here