அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு…!!!

0
213

இங்கிலாந்து அரசர் சார்லஸ் அவரது மனைவி ராணி கமிலா இன்று அந்நாட்டின் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றனர்.

இந்நிலையில் அம்மாகாணத்தின் மிக்லிகெட் பார் பகுதிக்கு அரசர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா சென்ற அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் சார்லஸ் – கமிலா மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார்.

இந்த முட்டை வீச்சு தாக்குதலில் முட்டை சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது.

முட்டை வீசியபோது அந்த நபர் ‘அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து முட்டை வீசி தாக்குதல் நடத்திய 23 வயதான கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.

அரசர் சார்லஸ் – ராணி கமிலா மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here