அவசரத் தேவைக்கு மாத்திரம் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

0
69
Immigration and Immigration Commissioner General Harsha Ilukpitiya has advised those who are in a hurry to get new passports to wait till September.-newsinlanka.com

‘கடவுச்சீட்டு அவசரமாகத் தேவைப்பட்டால் மாத்திரம், தற்போது விண்ணப்பிக்க முடியும்’ என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடவுச்சீட்டு அவசரமாகத் தேவைப்படாதவர்களை, ஒக்டோபர் மாதம் வரை காத்திருக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலேயே சர்வதேச தராதரத்துடனான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச சிவில் விமானப் போக்கு வரத்து அமைப்பின் நியமங்களைப் பூர்த்தி செய்யும் புதிய “இ-கடவுச்சீட்டு”, எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியிலேயே வழங்கப்படும் எனவும், இது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலைமையை மேம்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டில் உரிமையாளரின் அனைத்து விடயங்களையும் சேமித்து வைக்கும் “மைக்ரோசிப்” காணப்படும் என்றும், இது உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில், கடவுச்சீட்டு உரிமையாளர் குறித்த தகவல்களைப் பெறுவதை இலகுவாக்கும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here