அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்சரிவு 4 பேர் உயிரிழப்பு

0
132

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவிசாவளையின் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் அவிசாவளை – கொஸ்கொடவிற்கு இடைப்பட்ட பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது.

இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், இங்கிரிய – ஹல்வத்துர பகுதியில் 348.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here