இந்தோனேசியா பயணமாகிறார் ஜனாதிபதி

0
180

10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகிறார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் 20 ஆம் திகதி ; விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியுடனான விஜயத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் இணைந்து கொள்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here