இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார் அனுர ?

0
412

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில், இன்று பிற்பகல் ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்சியை சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் தபால் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் படி தபால் மூல வாக்களிப்பில் அனுர குமார திஸாநாயக்கா முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் பிரகாரம் அனுரகுமார முன்னிலையில் உள்ளதாக தெரியவருவதுடன், தேர்தல் ஆணையாளரின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானதன் பின்னர், இன்று பிற்பகல் அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கலாம் என அறியக்கூடியதாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here