இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கல இன்னும் விற்கப்படவில்லை

0
332

இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட ஆறுனூல் இரத்தினக்கல் ஆறு மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லையென இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விற்பனைக்காகவோ அல்லது பரிசோதனைக்காகவோ எடுத்துச் செல்லப்பட்ட இந்த மாணிக்கக் கல்லின் பெறுமதி 2,000கோடி ரூபாவுக்கும் அதிகமென அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் எனக் கூறப்படும் இரத்தினம் மற்றும் நகைச் சட்டத்தின் கீழ் ஆய்வு அல்லது விற்பனைக்காக எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் மூன்று மாதங்களுக்குள் மீளக் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால் இந்த இரத்தினக்கல்லை சுவிட்சர்லாந்தில் வைக்க கூட்டுத்தாபனம் கால அவகாசத்தை நீடித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here