இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் இன்று மக்கள் அஞ்சலிக்கு நாளை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும்

0
92

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரள்ளை பகுதியிலுள்ள ரேமன்ட் மலர்சாலையில் இன்று (02) வைக்கப்பட்டுள்ளது.

பொமுதுமக்கள் அஞ்சலியின் பின்னர் பாராளுமன்றத்திற்கு அன்னாரது பூதவுடல் நாளை புதன் (03) கொண்டு செல்லப்படவுள்ளது.

அதன ;பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடாத்தப்படவுள்ளன.

இறுதி கிரியைகளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) செய்ய எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஆ.யு.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here