இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கவுள்ள பங்களாதேஷ்

0
209

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பங்களாதேஷ் உருளைக்கிழங்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வருகிறது.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோனுடனான சந்திப்பின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் பாரிய சனத்தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவுகளை வளர்க்க பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here