இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா

0
304

இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ்க்கு கடந்தவார இறுதியில் கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, அவர் 5 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை லங்கா கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது தொடர்பில் தகவல் இல்லை.

மேலும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here