இலங்கை வரவுள்ளார் பசில்

0
215

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பும் அவர், கட்சி மறுசீரமைப்பு உட்பட கட்சி தொடர்பான பல பணிகளில் ஈடுபடுவதற்காக முன்னாள் அமைச்சர் நாடு திரும்பவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இலங்கையில் ஏற்பட்ட பொது அமைதியின்மைக்கு மத்தியில் பசில் ராஜபக்ச தனது அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, அவர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றமைக்குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here