இ.தொ.கா தலையீட்டால் மலையக பாடசாலைகளில் போதை பொருள் பாவனையை ஒழிக்க பொலிஸ் நடவடிக்கை

0
303
மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவணையிலிருந்து காப்பாற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் மாணவர்கள் போதை பொருள் பாவணைக்கு ஈடுப்பட்டுவருவதாக தகவல்கள் இ.தொ.காவுக்கு கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை போதை பொருள் பாவனையில் ஈடுப்படாது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையில் (07) காலை ஹட்டன் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் காங்கிரஸ் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான்,மருதபண்டி ராமேஸ்வரன் மற்றும் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளர் அர்ஜூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொலிசார் தரப்பில் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மந்திர் தலைமையில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இத்தருணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் குழு அமைத்து பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து விடுவிக்க கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அதிகாரிகளுக்கு பணித்தார்.
அத்துடன் பிரதி பொலிஸ் மாலதியின் கட்டளையை மீறும் பட்சத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மலையக தோட்டப் பகுதிகள் ,நகர்  மற்றும் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள்,இளைஞர்கள் போதை பொருள்விற்பணை மற்றும் பாவனையில் ஈடுப்படாது காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும்,தொழிற்சங்க ரீதியாகவும் பொலிசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும்,தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்படும் தொழிற்சங்க பிணக்குகளுக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்க கூடாது அது தொழிற்சங்கங்கள் பார்த்துக்கொள்ளும்.
என பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான் தொழிற்சங்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் தோட்டங்களுக்கு பொலிசார் செல்லும் முன் விடயம் தொடர்பில் இ.தொ.காவுக்கு தெரிவித்து அனுமதி பெற்று செல்ல வேண்டும் என ஜீவன் கேட்டுக்கொண்டார்.
ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here