உயிரிழந்த தொழிலாளிக்கு நீதி கோரும் டொரிங்டன் தோட்ட மக்கள்

0
333

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்குபிள்ளை கந்தையா (வயது 48) இன்று 11 காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுறை தோட்டத்திற்கு உர மூடைகளை ஏற்றிச்சென்ற டெக்கர் இயந்திரம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உர மூடைக்குள் சிக்குண்டு விபத்துக்குள்ளான தொழிலாளர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.கந்தையா உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் அத்துடன் தோட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இந்த விடயத்தை இ.தொ.கா பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த தொழிலாளி மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக திங்கட்கிழமை (12) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here