“எனக்கும் குரல் உண்டு”

0
220
சர்வதேச மனித உரிமைகள் தினம் வருடாந்தம் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் 74 வது மனித உரிமை தினம் (10.12.2022) காலை “எனக்கும் குரல் உண்டு” எனும் தொணியில் சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகிறது. இதில் ஒரு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய காரியாலயம் மற்றும் நுவரெலியா கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நுவரெலியா பிராந்திய கிளை காரியாலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரும், பேராசிரியருமான கலாநிதி விஜித்த நானயக்கார தலைமை தாங்கி நடத்தினார்.
இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மத்திய மாகாண பிராந்திய ஒருங்கிணைப்பாளர் குமுதினி வித்தான உள்ளிட்ட பலர் சிவில் அமைப்புகளின் பிரதநிகளும்  கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here