கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சென்ற ரயிலிலே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.