கடன் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்பு

0
201

COP 27 மாநாட்டுடன் இணைந்து கடன் முகாமைத்துவம் தொடர்பான
கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva), கானாவின் நிதி அமைச்சர் கென் ஒபோரி-அட்டா(Ken Ofori-Atta) மற்றும் மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் சபாநாயகர் மொஹமட் நஷீட்(Mohamed Nasheed) ஆகியோருக்குமிடையில் கடன் முகாமைத்துவம் தொடர்பான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here