கடும் மழை வெள்ளத்தினால் மலையக இரயில் சேவை பாதிப்பு

0
239

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் புகையிரத மார்க்கங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்றிரவு (25) பயணிக்கவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு தபால் புகையிரத சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

மேலும், முற்பகல் 9.45 மணிக்கு பதுளை நோக்கி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த புகையிரத சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இன்று கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதமும், பிற்பகல் 12.40 மணிக்கு ஹட்டன் நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here