கட்சியின் தலைவராக மீண்டும் சஜித்

0
141

பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மீண்டும் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான முன்மொழிவை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்ததோடு, அதனை கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்திருந்தனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளராகவும், ரஞ்சித் மத்தும பண்டார அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி, தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி ஆகியோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரினால் செயற்குழு உத்தியோகத்தர்கள் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டதோடு அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here