கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

0
92

கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டள்ளது.

இந்த வருடாந்த மஹோற்சவ விழாவைக் கண்டுகளிக்க நாட்டில் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக படையெடுத்து வருவது வழமையாகும்.

அதேநேரத்தில் கதிர்காமத்துக்குத் தரிசனத்துக்காக வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி அவர்களுக்கான பாதுகாப்பு, போக்கு வரத்து, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.

இந்தநிலையில் 2024ஆம் ஆண்டுக்கான எசல பண்டிகையை முன்னிட்டு கதிர்காம பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று 6ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு முடக்கப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here