கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி

0
277

கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவம் ஒன்றின் உரிமையாளாரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணயில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சில வைத்தியர்கள் விருந்துபசாரம் ஒன்றுக்காக கோழி புரியாணியை குறித்த ஹோட்டலில் ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரிந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here