குளிப்பதை க்ளிக் செய்த பொலிஸாருக்கு விளக்கமறியல் : லிந்துலையில் சம்பவம்

0
505
பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா நாணயக்கார (04.07.2024) மாலை பிறப்பித்தார்.
இது தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது.
லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் தங்குமிட  விடுதி குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை இதே பொலிஸ் நிலையத்தில் கொஸ்தாபல் பதவி வகிக்கும் ஆண் பொலிஸ் கொஸ்தாபல் தனது ஸ்மார்ட் போனில்  படம் பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த விடயம் ஏனைய பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து விசாரணைகள் தொடரப்பட்டு குறித்த பொலிஸ் கொஸ்தாபல் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்த லிந்துலை பொலிஸ் அவரை (04.07.2024) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இதன்போது இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி பிரபுதிகா நாணயக்கார சந்தேக நபரான பொலிஸ் கொஸ்தாபலை இம்மாதம் (09.07.2024) செவ்வாய் கிழமை வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here