கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரருக்கு சிட்னியில் வழங்கப்பட்ட தண்டணை

0
408

பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றமை உட்பட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here