கொட்டகலை -அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

0
422

கொட்டகலை -அரசினர் ஆசிரிய கலாசாலையின் புதிய அதிபராக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்த ரா. லோகேஸ்வரன் சேர் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை வரவேற்கும் நிகழ்வு கலாசாலையின் மாணவர் பேரவையால் மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலே உப பீடாதிபதியாக பணியாற்றிய ரா. லோகேஸ்வரன் சேர் பதவி உயர்வின் அடிப்படையில் ஆசிரிய கலாசாலையின் அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.

இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை ஸ்ரீPபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலே விரிவுரையாளராக, உப பீடாதிபதியாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ahilan Mookan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here