கொள்ளுப்பிட்டியில் விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

0
210

கொள்ளுப்பிட்டியில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குளளாக்கி 24 வயதுடைய கார் சாரதி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற (சனிக்கிழமை (10) காலை) அதே நாளில் சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரி யவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் தனது சொகுசு காரை முச்சக்கரவண்டியின் மீது பின்னால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here