கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் தீ

0
173

பதுளையில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் பயணித்த போது ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொடி மெனிகே ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here