கொழும்பு – பதுளை சொகுசு ரயில் சேவையில் அமைச்சரும் பயணித்தார்

0
383

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் சேவையில் 8 பெட்டிகள் உள்ளடங்கியதுடன், முற்பணம் செலுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும். ரயிலில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் உள்ளன.

முதல் நாள் ஆரம்பிக்கப்பட்ட ரயிலில் அமைச்சரும் விஜயம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here