சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி மூன்றாண்டு நிறைவு நிகழ்வு

0
273
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி ஏற்று 24 ஆம் திகதி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியிலும் மற்றும் இரத்தினபுரி இதலென வீரகொட விகாரையிலும் அன்றைய தினம்  வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மாகாண ஆளுநரின் சேவையை பாராட்டி அவருக்கு சப்ரகமுவ மாகாண நிர்மாண இயந்திர உபகரண அதிகார சபை உட்பட பல்வேறு நிறுவனங்களினால் ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவனொலிபாதமலையின் பிரதம குரு பெங்கமுவே தம்மதின்ன நாஹிமி, சப்ரகமுவ மாகாண  பிரதான செயலாளர் சுனில் ஜயலத், சப்ரகமுவ   மாகாண நிர்மாண இயந்திர உபகரண அதிகார சபையின் தலைவர் அநுர அலகியவன்ன மற்றும் அதன் பணிப்பாளர் பம்பரபோட்டுவ உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலார்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here