சாம்பியனானது இங்கிலாந்து அணி

0
177

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற  2022 ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளால் வென்று    இங்கிலாந்து அணி, 2022 ரி20 உலகக் கிண்ண சம்பியனாக தெரிவாகியுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 137 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 138 எனும் ஒட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அந்த வகையில் ரி20 ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி சுவீகரித்துள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 2010 இல் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற தொடரில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here