சாரதியை கொண்டாடிய பயணிகள்

0
686

30 வருடமாக இ.போ.ச பஸ்ஸில் சாரதியாக பணியாற்றி ஒய்வு பெற்றுச்செல்லும் என்டன் பெர்னான்டோ விற்கு பயணிகள், மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் பலரும் இணைந்து இன்று கௌரவித்து பிரியாவிடை செய்து வழியனுப்பி வைத்தனர்.

அவிசாவளை டிப்போவில் சாரதியாக கடமையாற்றி இவர் மஸ்கெலியா நோர்ட்டன் வழியாக அவிசாவளை மார்க்கத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வந்தார்

நேரம் தவறாது சிறந்த சேவையினை என்டன் பெர்னான்டோ செய்துவந்தமையினால் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், என பலரும் பயன் பெற்று வந்தனர்.

இந் நிலையில் ஒய்வு பெற்று செல்லும் அவரை மஸ்கெலியா அப்புகஸ்தனையில் பொண்ணாடை போர்த்தி கௌரவித்து நினைவு பரிசில் வங்கி பிரியாவிடை செய்து ஓய்வு காலம் சிறக்க வேண்டும் என வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here