சாராய தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட ஆணொருவர் கைது

0
247

வீடொன்றில் அனுமதியின்றி சாராய தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 40 வயதுடைய பெண்ணொருவரும் , 35 வயதுடைய ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்களின் உடைமையிலிருந்து 20 லீற்றர் காய்ச்சிய கள்ளச் சாராயம், 50 லீற்றர் கோடா உள்ளிட்ட இதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக நேற்றையதினம் (01) செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்த புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here