சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற சிறுமி துஸ்பிரயோகம் ; வைத்தியர் தலைமறைவு

0
255

வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக்க் கூறப்படும் சந்தேக நபரான வைத்தியர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும் காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சிறுமி சிகிச்சை பெற்ற சிகிச்சை அறைக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் தனக்களித்த முறைப்பாட்டுக்குமைய, நிறுவன மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்ததாக கராபிட்டிய வைத்தியசாலையின் பனிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர்  எஸ்.பி.யூ. எம். ரங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி, தனது தாயுடன் வந்து கொடுத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சிறுமியின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் வைத்தியரை தேடி வருவதாக காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனாதிபதி  சில்வா தெரிவித்தார்.

கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக  காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு 8 ஆம் திகதி வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here