2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனங்கள் 7,88,500 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்காக 43,200 கோடி ரூபாவும், கல்விக்காக 50,400 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தவிர, பாதுகாப்புச் செலவினங்களுக்காக 36,700 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புக்காக 57,200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
ரஞ்சித் சியம்பலபிட்டிய குறிப்பிட்டார். அரச வருமானத்தை 8.5 வீதத்திலிருந்து 13 வீதமாக அதிகரிக்கவும், அரச வருமானத்தில் 90 வீதத்தை வரி மூலம் பெறவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.