ஜனாதிபதி அநுரவின் அடுத்த அதிரடி நடவடிக்கை

0
153

இலங்கையின் அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களையும் மீளப்பெற ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் எனவும், அவர்களுக்கு இராஜதந்திர அனுபவம் இல்லாதவர்கள் எனவும், முழுக்க முழுக்க அரசியல் சார்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .

இதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள் அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட சகல நியமனங்களையும் இரத்துச் செய்து அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்க ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here