ஜனாதிபதி – பேராயர் மெல்கம் ரஞ்சித் சந்திப்பு

0
44

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க   கர்த்தினால்  பேராயர் மல்கம்  ரஞ்சிதை நேரில் சென்று சந்தித்து ஆசிகளை  பெற்றார்

இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பேராயர் “இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ​​

இலங்கையில் மிகவும் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம்.

நாட்டை கட்டியெழுப்ப  பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக  பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கூறியுள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here