டிப்பர் வாகனம் மோதி இளைஞர் பலி

0
174

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொரிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சேனையூர் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த வி.விதுர்சன் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சேனையூர் – மயிலிமலை பகுதியில் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுவரும் டிப்பர் வாகனமே மோதியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டு ள்ளதுடன் அதன் சாரதி சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கல்லுடைப்பிற்கு மக்களால் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த 9பேர் கடந்த 11ஆம் திகதி சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பில் ஆராய்வதற்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி சனிக்கிழமை (15) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று அவ்விடத்தை பார்வையிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here