தனியார் பஸ்வண்டி நடத்துனரை கட்டிவைத்து அடித்து சித்திரவரை செய்த உரிமையாளர்

0
459

தனியர் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக அவரை தனியர் பஸ்வண்டி உரிமையாளர் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவiதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில்  இடம் பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பண்வண்டி உரிமையாளரின் கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டியில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பஸ்வண்டியில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துனர் மீது தனியர் பஸ்வண்டி உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான இன்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவரை செய்துள்ளார்

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற நிலையில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here