தனியார் பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 10 க்கு மேற்பட்டவர்கள் காயம்- விடியோ இணைப்பு

0
297

எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ் வண்டியும் மற்றும் இரத்தினபுரி – தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேற்படி சம்பவம் இன்று காலை இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றது.

 

எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ் வண்டியை செலுத்தி வந்த சாரதி கடும் வேகத்தில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரத்தினபுரி தெனியாய தனியார் பஸ் வண்டியில் பயணித்தவர்களுக்கே அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

சிவா ஸ்ரீதரராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here