தனுஷ்க குணதிலக்கவை இடைநிறுத்தியது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

0
415

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில்  யுவதியொருவருடன் தவறாக நடந்துகொண்டதான குற்றச்சாட்டில்  தனுஷ்க குணதிலக்க நேற்று  அதிகாலை அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here